தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (23) நடைபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் பலர் கட்சிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண நகரை அண்மித்த பல இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்து, சீமானின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதுதவிர, மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர்கள் இன்று (22) மாலை நல்லூர் ஆலய சூழலில் மாட்டு வண்டியில் பவனி வந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இந்த மாட்டு வண்டி பவனி நடந்தது.

இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாகவும் பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

காக்கைதீவு பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக ஒரு பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.




