பல்பொருள் அங்காடிக்குள் திருடிய குற்றச்சாட்டில் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை

Date:

ராகமவில் உள்ள ‘அரலிய பரிசுப் பொருள் மையத்தில்’ விற்பனைப் பொருட்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு அவரது தலைமுடி வெட்டப்பட்டது. இந்தத் தாக்குதலின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, முக்கிய சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணைக் கண்டறிந்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக அவரை ராகம போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

காவல்துறை நடத்திய விரிவான விசாரணைகளின் விளைவாக, ராகம பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபரான 27 வயதுப் பெண் ஒருவரும், மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற நான்கு சந்தேக நபர்களின் வயதுகள் 20, 21, 22 மற்றும் 23 ஆகும். அவர்கள் ராஜங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை, சீனன்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18.04.2026 அன்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்