பிள்ளையானின் ஆதரவாளர்கள் போராட்டம்

Date:

பிள்ளையான் வெலிசறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கட்சித் தொண்டார்கள் கறுப்புப் பட்டியால் வாயைக்கட்டி அமைதியான கவனயீர்பு போராட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டு காந்து பூங்காவில் ஒன்று திரண்டு வாயை மூடி கறுப்பு துணியால் கட்டி நிலத்தில் அமர்ந்தவாறு இலங்கை நீதிதுறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்துக்கு தீர்வு கொடுங்கள், மக்கள் தலைவனுக்கு கடுமையான சிறைச்சாலையா? சிறைச்சாலையை மாற்றிக் கொடு,

ஜனநாயகத்தை நிலைநாட்டிய தலைவனுக்கு தடுப்பு காவல் சடங்களை பின்பற்றுவதில் என்ன, உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் சந்திரகாந்தனுக்கு தடுப்புகாவல் கைதிக்கு வசதிகளை வழங்கு, பிள்ளையானின் நிழல்படங்கள் ஏந்தியவாறு அமைதியாக போராட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஊடபங்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்