பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

Date:

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 92.

மும்பையில் உள்ள கேண்டி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் காலமானார். உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1933 இல் மகாராஷ்டிராவில் உள்ள சங்க்லியில் அவர் பிறந்தார். சிறு வயதிலேயே தனது இசைப்பயணத்தை அவர் தொடங்கினார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். இதில் இசையின் பல்வேறு ஜானர்களும் அடங்கும். 1950-களில் தேசம் பரவலாக அறியப்பட்ட நட்சத்திர பாடகராக உயர்ந்தார்.

தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோரது இசையில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார். செப்டம்பர் மாதம் (அலைபாயுதே), ஓ பட்டர்பிளை (மீரா), செண்பகமே செண்பகமே (எங்க ஊரு பாட்டுக்காரன்), நீ பார்த்த பார்வை (ஹே ராம்) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும். இசையில் அவரது பங்களிப்பை போற்றும் வகையில் தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம விபூஷண் விருது ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டன.

அவரது மறைவையடுத்து திரை உலகினர், இசைத்துறையினர், பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்