புதையல் தோண்டிய விசேட அதிரப்படை வீரர் கைது!

Date:

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 பேரை இன்று சனிக்கிழமை (11) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் பூஜை பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து சம்பவ தினமான இன்று அதிகாலை 5.00 மணிக்கு கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்ததுடன் பூஜை பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர் வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் வருவதுடன் விசேட நடவடிக்கைக்காக மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாமில் இணைக்கப்பட்டு கடமையாற்றி வந்துள்ள 36 வயதுடைய மொனரகலைச் சேர்ந்தவர் எனவும் மற்றும் உறுகாமம், தெய்யத்தகண்டி, பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48, 48 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விளையாட்டு பொம்மைகளுக்குள் போதைப்பொருள் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழந்தைகளின் பொம்மைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருட்களை கூரியர் சேவைகள்...

பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள்

ஹல்துமுல்ல பகுதியில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழு...

பெற்றோல் வாகனங்களிற்கான QR முறை ஒரு வாரத்திற்கு இரத்து!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்