தமிழக சீரியலில் நடித்து வந்த இலங்கை நடிகை விபரீத முடிவு

Date:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த நடிகை சுபாஷினி பாலசுப்ரமணியம் (36), திரைத்துறை மீதான காதலால் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

திரைப்படங்களில் சிறு வேடங்கள், சில சீரியல்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிபின் சந்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். மிக அண்மையில்தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் பின் கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார். கயல் சீரியல் படப்பிடிப்புக்காக சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர், சம்பவம் நடந்த நாளுக்கு முன்புவரை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கும் அவரின் கணவருக்கும் இடையே வீடியோ அழைப்பில் நடந்த தகராறையடுத்து, உயிரை மாய்த்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்