செங்கலடி நகருக்குள் நுழைந்த காட்டு யானை

Date:

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த அரிசி மூடைகளை தேசப்படுத்தியதுடன் அந்த பகுதியில் மதில்களையும் தென்னை மரங்கள் வாழைமரங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

செங்கலடி கறுத்தப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக நிலை கொண்டுள்ள காட்டு யானை சம்பவம் தினமான இன்று அதிகாலையில் செங்கலடி பதுளை வீதியல் உள்நுழைந்து கடையை உடைத்து அரிசி மூடைகளை சேதப்படுத்தியதுடன் பலன் தரும் மரங்களை உடைத்து தேசப்படுத்தியதையடுத்து அப்பகுதியில் இருந்து யானையை விரட்டிய அடைக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் யானைகள் தொடர்ந்து நகருக்கு உள்நுழையும் நடவடிக்கைகள் அண்மை காலங்களாக அதிகரித்து வருவதுடன் யானை தாக்குதல் வவுணதீவு, ஆயித்தியமலை, கரடியனாறு, கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுகளின் கீழ் வாழ்ந்து வரும் பலர் உயிரிழந்துள்ளதுடன் கிராம மக்கள் தினம் தினம் பயப் பீதியில் இரவு பொழுதை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

புதையல் தோண்டிய பிரதேச செயலக கணக்காளர் உள்ளிட்ட 9 பேர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலையம் ஒன்றிற்கு அருகாமையில்...

புதையல் தோண்டிய 2 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள்...

விமானியை மீட்க ஈரானுக்குள் தரையிறங்கிய 6 அமெரிக்க சீல் கொமாண்டோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானியை மீட்பதற்காக, அமெரிக்க கொமாண்டோக்கள் ஈரானிய எல்லைக்குள் ஆழமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்