கொத்துப் போட பிந்தியதால் உணவக ஊழியர் மீது தாக்குதல்!

Date:

மட்டக்களப்பு அரசடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள இரவு உணவகம் ஒன்றில் கொத்துரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மீது மதுபோதையில் சென்ற கண்ணா தலைமையிலான இளைஞர் குழுவினர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்திய குழுவினர் தப்பி ஓடிய சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசர் தெரிவித்தனர்.

குறித்த உணவகத்தில் சம்பவதினமான நேற்று இரவு 12.00 மணிக்கு சென்ற குழுவினர் கொத்து ரொட்டி சாப்பிடுவதற்கு ஓடார் செய்துள்ள நிலையில் அதனை தயாரித்து கொடுக்க நேரம் பிந்தி வழங்கியதாக தெரிவித்து கொத்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது மோட்டர் சைக்கிள் தலைக்கவசத்தல் அவரது தலையில் தாக்குதல் நடாத்திவிட்டு அந்த குழுவினர் தப்பி ஓடியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

புதையல் தோண்டிய பிரதேச செயலக கணக்காளர் உள்ளிட்ட 9 பேர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மண்முணை பிரதான வீதியில் ஆலையம் ஒன்றிற்கு அருகாமையில்...

புதையல் தோண்டிய 2 பெண்கள் உள்ளிட்ட 11 பேர் கைது!

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள்...

செங்கலடி நகருக்குள் நுழைந்த காட்டு யானை

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக நகருக்குள் உள்நுழைந்து காட்டு யானை ஒன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்