யாழில் இரு முதியவர்களின் சடலங்கள் மீட்பு!

Date:

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அல்வாய் பகுதியை சேர்ந்த 78 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் நேற்று (30) தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.

இந்நிலையில் இன்று (31) காலை முதியவர் வியாபாரிமூலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானி சாய் ரோஷன் ஷாமை மணந்தார் நடிகை ஜனனி

நடிகை ஜனனி தனது காதலர் சாய் ரோஷன் ஷாமை திருமணம் செய்து...

மட்டக்களப்பு பெண்கள் கடத்தல் விவகாரம்: வத்தளை மருந்தக உரிமையாளருக்கு தடுப்புக் காவல்!

மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின்...

சோறு, கொத்து விலைகள் உயர்வு!

இன்று (31) நள்ளிரவு முதல் மதிய உணவு பொதி மற்றும் கொத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்