விவசாயி மனைவி கணக்கில் ரூ.10 கோடி திடீரென வரவு வைத்த வங்கி – ஒரு ரூபாய் கூட எடுக்காததால் குவியும் பாராட்டு

Date:

உத்தர பிரதேச மாநிலம் மெய்ன்​புரி மாவட்​டம், தேவ்​கஞ்ச் கிராமத்​தில் வசிப்​பவர் பராஸ்​பன் பஹிலி​யா, விவ​சா​யி. இவரது மனைவி ரீடா. இவர் பேங்க் ஆப் இண்​டி​யா​வில் கணக்கு வைத்​துள்​ளார்.

அஷ்டமி விழாவை முன்​னிட்டு வங்​கிக்கு விடுமுறை என்பதால், அரு​கில் உள்ள ஏடிஎம் மையத்​துக்கு ரீடா சென்று தனது வங்​கிக் கணக்​கில் எவ்​வளவு பணம் உள்​ளது என்று பார்த்​தார். அப்​போது, ரூ.9 கோடியே 99 லட்​சத்து 49,588 இருந்​ததைப் பார்த்து ரீடா மலைத்​துப் போனார். ஏடிஎம்.மில் காட்டிய தொகையை மொபைல் போனில் வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளி​யிட்​டார்.

அது வைரலாகி​ விட்​டது. பின்​னர், தனது வங்​கிக் கணக்​கில் உள்ள பணத்தை யாரும் எடுக்கக் கூடாது என்று குடும்ப உறுப்​பினர்​கள் அனை​வரிட​மும் ரீடா திட்​ட​வட்​ட​மாகக் கூறி​விட்​டார். அதை அறிந்து அக்​கம் பக்​கத்​தினர் ரீடா​வின் நேர்​மை​யைப் பாராட்டினர்.

தகவல் அறிந்த கரீம்​கஞ்ச் பேங்க் ஆப் இண்​டியா கிளை மேலா​ளர் ரிஷி​காந்த் பாண்டே கூறும்​போது, “பணப் பரி​மாற்​றம் நடைபெறும்​ போதோ அல்​லது தொழில்​நுட்​பக் கோளாறு காரணமாகவோ தவறாக பணம் ரீடா வங்​கிக் கணக்​கில் பணம் வரவு வைக்​கப்​பட்​டிருக்​கலாம். வங்​கிக் கிளை திறந்​தவுடன் அது சரி செய்​யப்​படும்” என்​றார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்