வாகனங்கள் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, ஜெனரேட்டர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“எரிபொருள் நிலையங்களில் கியூஆர் குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் எரிபொருளைப் பெற முடியும். திங்கட்கிழமை, இந்த வகையின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான நடைமுறையை நாங்கள் தெளிவாக விளக்குவோம்,” என்று அவர் கூறினார்.
மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கை கியூஆர் முறை மூலம் எரிபொருள் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.



