ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) உள்ள பல ஈரானிய உயர் தளபதிகள் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய செய்தி ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில், IRGC செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனியும் கொல்லப்பட்டார்.
“அமெரிக்க-சியோனிசத் தரப்பால் விடியற்காலையில் நடத்தப்பட்ட குற்றவியல் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி வீரமரணம் அடைந்தார்,” என்று IRGC தனது செபா நியூஸ் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும், IRGC-யின் விமானப் படைத் தளபதியான மெஹ்தி குரைஷி, இஸ்பஹானில் நடந்த இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவும், பசிஜ் உளவுப் பிரிவின் தளபதியான ஜெனரல் இஸ்மாயில் அஹ்மதி, வியாழக்கிழமை நடந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் பெயர் குறிப்பிடப்படாத மேலும் மூன்று பேருடன் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் பெப்ரவரி 28 முதல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. அரசாங்கப் பிரமுகர்களுடன், ஐ.ஆர்.ஜி.சி, இராணுவம் மற்றும் பசிஜ் படையின் உயர் மட்டத் தளபதிகளும் இதன் முக்கிய இலக்குகளில் அடங்குவர்.
தாக்குதல்கள் தொடங்கிய முதல் நாளிலேயே, உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார்.



