ஈரானின் புதிய உச்ச தலைவர் இலேசான காயமடைந்திருக்கலாம்: இஸ்ரேல் உளவுத்துறை மதிப்பீடு!

Date:

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்க கூட்டு வான்வழிப் போரில் ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி லேசான காயமடைந்தார், அதனால்தான் அவர் பொதுவில் காணப்படவில்லை என்று இஸ்ரேலின் உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாக, இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

தற்போதைய ஈரானியத் தலைமையால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும் “அழிக்கப்படுவதற்கான சந்தேகத்திற்கு இடமில்லாத இலக்காக இருப்பார்” என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடந்த வாரம் கூறினார்.

புதன்கிழமை முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரின் போது காயம் ஏற்பட்டதாக செய்திகள் வந்த போதிலும், கொமெனி “பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும்” இருப்பதாக ஈரானிய ஜனாதிபதியின் மகன் கூறினார்.

“திரு மொஜ்தபா கமேனி காயமடைந்ததாக நான் செய்தி கேள்விப்பட்டேன். தொடர்புகளைக் கொண்ட சில நண்பர்களிடம் கேட்டேன். கடவுளுக்கு நன்றி, அவர் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்,” என்று அரசாங்க ஆலோசகராகவும் இருக்கும் யூசெப் பெசெஷ்கியன் தனது டெலிகிராம் சேனலில் ஒரு பதிவில் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்