புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

Date:

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை, 20 இராணுவ வீரர்களுக்கு நடத்தப்படும் லோகோமோட்டிவ் ஓட்டுநர் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புக்கொண்டதை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.

ரயில் லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான குழுவில், இராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்தனர்.

எனினும் அவ்வாறு பயிற்சியில் ஈடுபடவிருந்த 20 இராணுவத்தினரையும் இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தாம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதாக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் அறிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்