இனி யாழ் மாநகரசபை கூட்டங்களில் ஆணையாளர் பங்குபற்றார்!

Date:

எதிர்வரும் காலங்களில் யாழ் மாநகர சபை ஆணையாளர் மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்கமாட்டார் என மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது மாநகர சபை ஆணையாளர் பங்கேற்கவில்லை. தான் பங்கேற்காதமை தொடர்பில் மாநகர சபை முதல்வருக்கு கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில், மாநகர சபை ஆணையாளர் மாநகர சபை கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மாநகர சபை கட்டளைச் சட்டங்களிலோ மாநகர சபை நியம துணை விதிகளிலோ குறிப்பிடப்படாததால் எதிர்வரும் காலங்களில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

சபை அமர்வு குழு நிலை கூட்டங்களாக மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் மாநகர சபை ஆணையாளரின் ஆலோசனை தேவை என கருதும் பட்சத்தில் அழைக்கப்பட்டால் பங்கேற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்