வாழைச்சேனை புனாணை வனவிலங்கு காரியாலயம் உடைத்து துப்பாக்கி திருட்டு

Date:

மட்டக்களப்பு புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று மற்றும் ரில்லர் இயந்திரம் உட்பட்ட பொருடகள் திருட்டு போயுள்ள சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கொழும்பு வீதியில் உளள புனாணையில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வருபவர்கள் வழமைபோல வெள்ளிக்கிழமை (02) மாலையில் கடமை முடிந்ததும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று அடுத்த நாள் சனிக்கிழமை (02) காலையில் காரியாலயத்துக்கு வந்தபோது அங்கு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

குறித்த காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு காரியாலயத்துக்கு உள் நுழைந்து அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவன் ஒன்று ஆகிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராசா சரவணன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

முற்றத்திற்கு சென்றதால் சில நொடிகளில் மரணத்திலிருந்து தப்பித்த மொஜ்தபா: அலி கமேனி கொல்லப்பட்ட நாளில் நடந்த சம்பவம்!

மொஜ்தபா கமேனி தோட்டத்தில் உலாவ வெளியே வந்தபோது சில நொடிகளில் மரணத்திலிருந்து...

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து!

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய...

பெண் சட்டத்தரணிக்கு வாழ்நாள் தடை

சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்