இலங்கை காத்திருந்த பேருந்து… 70 பயணிகளுடன் கலாஓயா பாலத்தில் சிக்கியது இந்த பேருந்துதான்!

Date:

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் கலாஓயா பாலத்திற்கு அருகில், இராஜாங்கணையில், விஜயபோதிராஜராம விகாரைக்கு முன்னால், 28 ஆம் திகதி சுமார் 70 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பேருந்தை நாடே அறியும்.

இந்த பேருந்து பற்றிய தகவல்கள் அதிகம் பரவியதும், இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படையும் மீட்பு முயற்சி மேற்கொண்டதும் நாமே அறியும்.

இரண்டு நாட்களாக நடந்த மீட்பு முயற்சியின் பின்னர், ஹெலிகொப்டர்கள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர்.

பேருந்துக்குள்ளிருந்த பயணிகள் அருகிலிருந்த கட்டிடத்தின் கூரையில் ஏறி உயிரைக்காப்பாற்றிக் கொண்டனர்.

பின்னர் ஹெலிமூலம் மீட்கப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையை ஜனாதிபதி நேரடியாக கண்காணித்திருந்தார்.

இன்று 30 ஆம் திகதி காலை வாக்கில், வீதி தெரியும் அளவுக்கு வெள்ளம் தணிந்திருந்தது. அந்த பேருந்தும் தற்போது முழுமையாக தெரிகிறது. பயணிகள் உயிரைக் காப்பாற்ற ஏறியிருந்த கூரையும் அருகில் தெரிகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்