டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன.
கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அப்படி உயிரிழந்த சிலரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன. கிராமமே மண்சரிவில் நிர்மூலமானதாலும், மக்கள் இடம்பெயர்ந்ததாலும் மிகச்சிலருடன் இறுதிச்சடங்கு நடந்தது.
உடல்களை வைக்க சவப்பெட்டியும் இல்லாமல் இறுதிச்சடங்கு நடந்த காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது.



