இரணைமடு குளத்தின் நீர் 40 அடியை எட்டியது!

Date:

கிளநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்கொள்ளளவு 40 அடியை எட்டியுள்ளது.

36 அடியை எட்டியதும் அதன் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டிருந்தது. எனினும், நீர் வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று அதன் வால்கட்டு பகுதி வெட்டப்பட்டு, மேலதிக நீர் வெளியேற்றப்பட்ட போதும், அதிக நீர் வரத்து இருப்பதால் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது 40 அடியை எட்டியுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால் வட்டக்கச்சி, மயவனூர், கண்டாவளை பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால் பரந்தன்- முல்லைத்தீவு வீதி வெள்ளத்தில் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதியும் வெள்ளத்தில் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...

யாழ் கோயில் திருவிழாவில் அதிசக்தி மின்விளக்குகள்: கண் பாதிப்பால் 25 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்