வல்வெட்டித்துறை நகரசபை முதல்வராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.
வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராக பதவிவகித்த தவமலர் உறுப்பினர் பதவியை துறந்ததை தொடர்ந்து, சங்கு கூட்டணியின் சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நகரசபை உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று (28) புதிய தவிசாளருக்கான தெரிவு நடந்தது.
இதில் சங்கு, சைக்கிள் அணி சார்பில் எம்.கே.சிவாஜிலிங்கமும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மயூரனும் போட்டியிட்டனர். சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவாக வாக்குகளும், மயூரனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதன்மூலம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவானார்.



