பூநகரி பிரதேச மாவீரர் தின நிகழ்வும், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கௌரவிப்பும் இன்று காலை 9.30 மணிக்கு பிரதேச மாவீரர் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
முன்னாள் அரசியல்துறை போராளியான தமிழரசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர், பொது மக்கள், சமயத்தலைவர்கள், என பலர் கலந்துகொண்டனர்.



