யுவதிகளுக்கு நிர்வாணமாக அழைப்பெடுப்பவர் கைது!

Date:

தனது படுக்கையறையில் நிர்வாணமாக இருந்து கொண்டு, வாட்ஸ்அப் மூலம் இளம் பெண்களுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதற்காக ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படும் 22 வயது சந்தேக நபர், கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறையில் மறைந்திருந்தபோது, ​​பொலிஸாருக்கு கிடைத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பல சிம் கார்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், இதன் மூலம் கைது செய்யப்பட்ட இளைஞன் சிறிது காலமாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்