சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன்

Date:

சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது.

ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ஆஞ்​சநே​யுலு (85). இவர் கூலி வேலை செய்​து, 20 ஏக்​கர் விவ​சாய நிலத்தை வாங்கி அதில் விவ​சா​யம் செய்து வந்​துள்​ளார்.

கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஆஞ்​சநேயலு​வின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்​தார். இவருக்கு நாகேஸ்வர ராவ், வெங்​கடேஸ்​வருலு என 2 மகன்​கள் உள்​ளனர். இதில் நாகேஸ்வர ராவ் காதலித்து திரு​மணம் செய்து கொண்​டு, தெலங்​கானா மாநிலத்​தில் வசித்து வரு​கிறார். இளைய மகன் வெங்​கடேஸ்​வருலு​விடம்​தான் பெற்​றோர் வசித்து வந்​தனர்.

தாய் இறந்த பின்​னர், தந்​தைக்கு மருத்​து​வம் உட்பட அனைத்​தை​யும் இளைய மகனே செய்து வரு​கிறார். இந்​நிலை​யில், உடல்​நலம் குன்றி கடந்த 3 நாட்​களுக்கு முன்​னர், ஆஞ்​சநே​யுலு உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து மூத்த மகன் நாகேஸ்வர ராவுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவரும் தனது குடும்​பத்​தா​ருடன் வந்​தார். அதன் பின்​னர், உற்​றார், உறவினர்​கள், நண்​பர்​கள், அக்​கம்​பக்​கத்​தார் என பலர் ஆஞ்​சநே​யுலு​வுக்கு இறுதிச் சடங்​குக்கு ஏற்​பாடு செய்​தனர். அப்​போது பாடை​யில் ஏற்​றிய தந்​தை​யின் உடலை எடுக்க விடா​மல் நாகேஸ்வர ராவ் தடுத்து நிறுத்​தி​னார்.

எனக்கு சொத்​தில் சரி​பாதி கொடுத்து விட்​டுத்​தான் சடலத்தை எடுக்க வேண்​டும். இல்​லா​விட்​டால், எத்​தனை நாட்​களா​னாலும் சரி சடலத்தை எடுக்க விட மாட்​டேன் என கூறி வருகிறார். ஏற்​கெனவே தாய் இறந்​த​போது சொத்​தில் 2 ஏக்​கர் நிலம் கொடுத்து விட்​டேன். பெற்​றோரை கடைசிவரை நான்​தான் பார்த்துக் கொண்​டேன். ஆதலால், இனி ஒரு சல்லி காசு கூட நான் கொடுக்க மாட்​டேன் என தம்பி வெங்​கடேஸ்​வருலு​வும் கறா​ராக சொல்லி விட்​டார்.

கிராமத்​தினர், உற்​றார், உறவினர்​கள் எவ்​வளவோ எடுத்து கூறி​யும் சடலத்தை எடுக்கவிடாத காரணத்​திலால் ஆஞ்​சநே​யுலு​வின் உடல் வீட்டு வாசலிலேயே வைக்​கப்​பட்டு உள்​ளது. போலீ​ஸாரும், ஊராட்சி மன்​றத்​தினரும் கூட இரு தரப்​பினரிடம் பேசினர். சடலத்தை எடுக்கா விட்​டால், பஞ்​சா​யத்​தாரே அந்த சடலத்​துக்கு இறுதி மரி​யாதை செலுத்தி அடக்​கம் செய்து விடு​வோம் என எச்​சரித்​தும் பலன் இல்​லை.

யாருடைய சமரசத்​துக்​கும் மகன்​கள் ஒப்​புக்​கொள்​ளாத​தால் கடந்த 3 நாட்​களாக தந்​தை ஆஞ்​சநே​யுலு​வின்​ சடலம்​ வீட்​டு வாசலிலேயே வைக்​கப்​பட்​டுள்​ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்