முந்திரி, பாதாம், பிஸ்தா தின்று வளர்ந்த எருமை மாட்டின் விலை ரூ.8 கோடி

Date:

உத்​தரபிரதேச மாநிலம் மீரட்​டில் சர்​தார் வல்​லப​பாய் பட்​டேல் வேளாண் பல்​கலைக்கழக. வளாகத்​தில் விவ​சாயிகளுக்கான சிறப்பு சந்தை நடை​பெறுகிறது.

இதில் வட மாநிலங்களின் விவ​சா​யிகள் பலர் பங்கேற்​கின்​றனர். ஹரி​யா​னா​வின் விவ​சா​யி​யான நரேந்​திரசிங்​கும் தனது எரு​மையை இங்கு காட்​சிக்கு வைத்​துள்​ளார். மீரட் சந்​தை​யில் இந்த ஹரி​யானா மாநில எரு​மைக்கு ரூ.8 கோடி விலை வைக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், அதன் உரிமை​யாளர் நரேந்​திரசிங் தன் எரு​மையை விற்​பனை செய்ய விருப்​பம் இல்லை எனத் தெரி​வித்​துள்​ளார். அந்த எரு​மைக்கு ‘எம்​எல்ஏ’ என அதன் உரிமை​யாளர் பெயர்​சூட்​டி​யுள்​ளார்.

இது குறித்து விவ​சாயி நரேந்​திரசிங் கூறுகை​யில், ‘எனது எருமை முர்ரா எனும் உயர்​வகை இனத்​தைச் சேர்ந்​தது. இதற்கு அன்​றாட உணவாக எட்டு லிட்​டர் பால், நெய், முந்​திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை உள்​ளது. கடந்த 2 வருடங்​களாக வட மாநிலங்​களின் எந்த சந்​தைக்கு சென்​றாலும் எனது எம்​எல்​ஏ-​விற்கு சிறப்பு பரிசு கிடைத்து வரு​கிறது.’ என்​றார்.

ஹரி​யானா விவ​சாயி நரேந்​திரசிங் பத்​மஸ்ரீ விருது பெற்​றவர். தனது எரு​மை​யின் உயிரணுவை விற்று அவர் ஒவ்​வொரு ஆண்​டும் லட்​சக்​கணக்​கான ரூபாய்​ வரு​மானம்​ ஈட்​டு​கிறார்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி இவர்தான்: தனி விசாரணை நடத்தி கண்டுபிடித்த கோட்டாவின் கூட்டாளி!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று சட்டத்தரணி உதய...

‘என் குழந்தைக்கு தந்தை இவர்தான்’: இலங்கை கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்ன மீது விமானப்பணிப்பெண் தொடர்ந்த வழக்கு!

கிரிக்கெட் வீரர் சம்மிக கருணாரத்னவை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதா இல்லையா என்பதைத்...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்