இன்று கைது செய்யப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் வீரவன்ஸ பெரேரா ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
அதிகாரசபைக்கு ரூ.29.5 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு முன்னாள் அரசு அதிகாரிகளும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு 05, மயூரா பிளேஸில் அமைந்துள்ள 55.5 பேர்ச் நிலத்தை தற்காலிகமாக குத்தகைக்கு எடுத்ததாகவும், இதன் விளைவாக அரசுக்கு ரூ.29,519,666.16 இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




