மகாராஷ்டிரா கட்டிட விபத்து- 15பேர் உயிரிழப்பு!

Date:

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் விரார் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை (27) இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விரார் பகுதியில் உள்ள நாரங்கி வீதியில் அமைந்துள்ள நான்கு மாடி ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம், அதிகாலை 12.05 மணியளவில் அருகிலுள்ள ஒரு கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் சில உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.

ஏனையவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தேடுதல் பணி இன்னும் தொடர்வதாக கூறியுள்ளனர்.

இந்தக் கட்டிடம் முதலில் 2008 மற்றும் 2009 க்கு இடையில் 54 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நான்கு வர்த்தக நிலயைங்களுக்கா கட்டப்பட்டது.

இருப்பினும் அதன் சில பகுதிகள் 2012 இல் மாற்றியமைக்கப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்