கடந்த மே 9, 2022 ம் ஆண்டு காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) தேசபந்து தென்னகோன் இன்று பிழணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவில் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளுடன் அவருக்கு பிணை வழங்கி பயணத் தடை விதித்தார்.
தும்பரா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னகோன் ஜூம் மென்பொருள் தொழில்நுட்ப தொடர்பாடல் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தென்னகோன் இந்த வழக்கில் 33வது சந்தேக நபர் அல்ல, 37வது சந்தேக நபர் என்றும், 33வது சந்தேக நபர் லியானாட் மெண்டிஸ் என்றும் நீதவான் மேலும் தெளிவுபடுத்தினார்.
2022ஆம் ஆண்டு அலரிமாளிகை காலி முகத்திடலில் முன்னைய அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை மையப்படுத்தி அப்போதைய அரசை பதவி நீக்க பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.
குறித்த போராட்டகாரர்கள் மீது பொலிஸ் தரப்பு சரமாரியான தாக்குதல்களை முன்னெடுத்ததோடு தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு துணை போன குற்றச்சாட்டடில் முன்னாள் துணை பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




