‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதியான உங்கள் கணவர்…’: மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எழுதிய அதிர்ச்சிக் கடிதம்!

Date:

மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக உள்ள வைத்தியர் வினோதன், அண்மையில் மாவட்டத்திலுள்ள சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலான எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

குடும்பநல உத்தியோகத்தரான பெண் ஒருவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுப்பது தொடர்பில் அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில், பெண்ணின் கணவரான முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை- எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிக்ள் என்று எழுதி தமிழ் மக்களது மனங்களைப் புண்படுத்தியமைக்காக வைத்தியர் விநோதன் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்