நல்லூர் கந்தன் கொடியேற்றம்

Date:

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 08.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையுடன் ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.

பிள்ளையார், முருகப்பெருமான், வள்ளி – தெய்வானை மூஷிகம், மயூரம், அன்னம் ஆகிய மூன்று தங்க வாகனங்களில் உள்வீதி உலா வந்து காட்சியளித்தனர்.

மகோற்சவம், தொடர்ந்து 25 நாட்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

மகோற்சவத்தில், மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும்,மாம்பழ திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதியும் , சப்பரத் திருவிழா எதிர்வரும் 20ஆம் திகதியும், தேர்த் திருவிழா 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன.

தீர்த்த திருவிழா 22ஆம் திகதி காலை இடம்பெற்று , மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவம் நிறைவுபெறும்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்