கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளரின் அலுவலகத்திற்குள் நேற்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த பெண் ஒருவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையின் 59வது விடுதியில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காலை 10 மணியளவில் தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு வந்த அந்த பெண், பதில் பணிப்பாளரை அச்சுறுத்தியதாகவும், பதில் பணிப்பாளர் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பதில் பணிப்பாளர் தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவர் அந்த இருக்கையில் அமர்ந்து, தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால் ராஜினாமா செய்யுமாறு கத்திக் கொண்டிருந்தார் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மருத்துவமனை அதிகாரிகள் வந்து மருத்துவரை தேசிய மருத்துவமனையின் மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு மனநலப் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.




