இந்த ஆண்டு இதுவரை 27,932 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் 16 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, 45 சதவீத டெங்கு காய்ச்சல் நோயாளிகள் மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். மேற்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. டெங்கு காரணமாக பல குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
டெங்கு மற்றும் சின்னம்மை பரவுவதைத் தடுக்க, நாளை (30) முதல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடத்தப்படும்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கூறுகையில், இந்த நடவடிக்கை 16 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் என்றும், குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகரித்ததைத் தொடர்ந்து, நுளம்பு பெருக்கத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.




