இந்த ஆண்டு 16 டெங்கு மரணங்கள்!

Date:

இந்த ஆண்டு இதுவரை 27,932 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் 16 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, 45 சதவீத டெங்கு காய்ச்சல் நோயாளிகள் மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர். மேற்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. டெங்கு காரணமாக பல குழந்தைகள் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் சின்னம்மை பரவுவதைத் தடுக்க, நாளை (30) முதல் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம் நடத்தப்படும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கூறுகையில், இந்த நடவடிக்கை 16 மாவட்டங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் என்றும், குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகரித்ததைத் தொடர்ந்து, நுளம்பு பெருக்கத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்