இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக மகஜர் கையளித்துள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் தமிழ் மக்கள் மீனதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் கடிதம் ஒன்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
பி.ப 3.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது குறித்த இவ் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள சிவில் சமூகத் தரப்பினரால் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் கீழ்வரும் தரப்புக்கள் கையொப்பமிட்டுள்ளன.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ்த் தேசிய பேரவை
சி.வி.கே சிவஞானம்
பதில் தலைவர் இலங்கை தமிழரசு கட்சி
செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் தமிழீழ விடுதலை கழகம்
இணைத் தலைவர் – ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
த.சித்தார்த்தர்
இணைத்தலைவர்
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
ந.சிறீகாந்த
சிரேஸ்ட சட்டத்தரணி
தலைவர்
தமிழ்த் தேசிய கட்சி
கே.வி.தவராசா
ஜனாதிபதி சட்டத்தரணி
தலைவர்
ஜனநாயக தமிழரசு கட்சி
P.N.சிங்கம்
தமிழ் சிவில் சமூக அமையம்
பொ.ஐங்கரநேசன்
தலைவர்
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
வேலன் சுவாமிகள்
சிவகுரு ஆதீனம்
யோ.கனகரஞ்சினி
செயலாளர்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்
தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள்
திருகோணமலை
ஆ.தீபன்தலீசன்
உபதலைவர்
இலங்கை ஆசிரியர் சங்கம்
ந.இனபநாயகம்
தலைவர்
கிராமிய உழைப்பாளர் சங்கம்
க.பிறேமச்சந்திரன்
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
தலைவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மு.சந்திரகுமார்
பொதுச் செயலாளர்
சமத்துவக் கட்சி




