ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஆணையாளர் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதற்கமைய சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டு அங்கு நின்றிருந்தவர்களையும் சந்தித்தார்.
அதே போன்று செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு போராட்ட களத்திற்கும் சென்று அங்குள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தினார்.




