கொழும்பில் ஆடம்பர சொத்து: சாணக்கியன், பிள்ளையான் தொடர்பிலும் சிஐடி விசாரணை!

Date:

கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் அறிவுசார் சொத்து விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையின் கூற்றுப்படி, பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் அடங்குவர்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து CID விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சிங்கள ஊடகங்களை மேற்கோளிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரிடமும் விசாரணைகள் நடந்து வருவதாக அறிக்கை கூறுகிறது.

சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பல புகார்களின் அடிப்படையில் CID விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ஷ, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, பவித்ரா வன்னியாராச்சி, காஞ்சனா விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அனுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணயக்கார, வடிவேல் சுரேஷ், துஷார சஞ்சீவ பத்திரன, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் ராசமாணிக்கம், சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மற்றும் சாந்த அபேசேகர மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிடடவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்