யாழ் நகரிலுள்ள விடுதியின் மின்தூக்கியில் விபத்துக்குள்ளான இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இன்று (21) மாலை இந்த சம்பவம் நடந்தது.
யாழ்ப்பாணம், பண்ணை பகுதிக்கு அருகிலுள்ள பிரபல விடுதியின் பணியாளர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விடுதியின் மேல்மாடிக்கு பொருட்களை கொண்டு செல்லும் மின்தூக்கியிலிருந்து வெளியே எட்டிப்பார்த்த போது, மேலிருந்த இரும்பு தண்டவாளம் தலையில் மோதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




