கார் ஓட்டி வந்த தாய் மீது குதித்த 2 வயது மகள்: வீதியில் நிகழ்ந்த பயங்கரம்!

Date:

ஒரு காரை ஓட்டி வந்த ஒரு பெண்ணின் இரண்டு வயது மகள் தனது தாய் மீது மீது திடீரென குதித்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஒரு சிறிய லொறி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர் என்று வாதுவ காவல்துறை தெரிவித்துள்ளது.

காரை ஓட்டி வந்த பெண் தனது இரண்டு வயது மகளுடன் தேவாலயத்திற்குச் சென்று, களுத்துறையிலிருந்து பாணந்துறை நோக்கி வீட்டுக்கு செல்வதற்காக காரின் பின் இருக்கையில் 2 வயது மகளை இருத்தி விட்டு, காரை செலுத்தியுள்ளார்.

இதுவரை நடந்த விசாரணைகளில், வாதுவவின் தல்பிட்டி பகுதியில் 2 வயது சிறுமி, காரின் ஓட்டுனர் இருக்கையில் குதித்ததாகவும், இதனால் கார் ஓட்டுநர் இருக்கையில் இருந்த தாயின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் அருகில் நின்ற பாதசாரி மீது மோதியது. விசாரணையை நடத்தும் அதிகாரி ஒருவர், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறி மீது முச்சக்கர வண்டி மோதியதாகவும் கூறினார்.

படுகாயமடைந்த நபர் பாணந்துறை அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தில் இறந்தவர் ஒரு பாதசாரி என்றும் அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த பெண் கைது செய்யப்பட்டு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும்...

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்