செம்மணி மனித புதைகுழியருகே போராட்டம்

Date:

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி வரவேற்பு வளைவுக்கு அருகாக இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் காலத்துக்குக் காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால், அவற்றுக்கான நீதி நிலைநாட் டப்பட்டுவிட்டதா? என்று கேட்டால் அதற்கு ‘இல்லை’ என்பதுதான் பதிலாகவுள்ளது.

எனவே. இதுவரை அவதானிக்கப்பட்ட புதைகுழிகளுக்கு நீதிகோரியும், செம்மணிப் புதைகுழியில் சர்வதேச கண்காணிப்பைக் கோரியும், காணாமலாக்கப்பட்டோருக்கான சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அகழ்வுப் பணிகளை பார்வையிட அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் செம்மணி வளைவுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்