இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது பலாலியில் கைதான அகதி விடுதலை!

Date:

UNHCR உதவியுடன் இந்தியாவிலிருந்து திரும்பிய 75 வயது இலங்கை அகதி, பலாலி விமான நிலையத்தில் “சட்டப்பூர்வமற்ற துறைமுகம் வழியாக குடிபெயர்ந்தார்” என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று (2) திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார்.

நாடு திரும்பியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்ததை தொடர்ந்து அரசின் கவனத்துக்கு சென்றது.

நாடு திரும்பியவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளதாகவும், இந்த நடவடிக்கை நாடு திரும்ப பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 10,000 அகதிகளை அச்சப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

காலாவதியான போர்க்காலச் சட்டத்தின் இயல்பான பயன்பாட்டினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கக் கொள்கையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார். இந்த விதிமுறை நீண்ட காலத்திற்கு முன்பே திருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

உடனடி சட்ட சீர்திருத்தங்களை உறுதியளித்ததுடன், பொதுப்பாதுகாப்ர் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுடன் தான் பேசியதாக கூறினார். தானும் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் 2007 இல் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களுக்குச் சென்று 28,500 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் 2008 சட்டத்தை ஆதரித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச், அந்த நபரின் விடுதலையை வரவேற்று, அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தைப் பாராட்டினார்.

“பல தசாப்தங்களாக இடம்பெயர்ந்த அனைத்து அகதிகளையும் வரவேற்றதற்காக நாங்கள் அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம்,” என்று ஃபிராஞ்ச் கூறினார். “இந்த முக்கியமான கொள்கை மாற்றம், இலங்கை அகதிகள் தாயகம் திரும்புவதற்கும், அவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் உதவுவதற்காக UNHCR இன் 35 ஆண்டுகளுக்கும் மேலான பணியை மேலும் ஆதரிக்கும்.”

Share post:

spot_imgspot_img

More like this
Related

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...

பசிலுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்த பல்கலைக்கழக மாணவர் சங்கம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சங்கம் (INTA), சில காலமாக பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது...

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்