மட்டக்களப்பு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

Date:

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னங்குடா கிராமத்தில் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியிலே இன்று (02) ஆம் திகதி பிற்பகல் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்இணைப்பு – குடிநீர் பிரச்சினை காரணமாக இருவருக்கிடையில் இடம் பெற்ற வாக்குவாதத்தில் துப்பாக்கிதாரி தன்னிடம் இருந்த உள்ளூர் தயாரிப்பான கட்டு துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் 37 வயதான சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்