தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டது: நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து?

Date:

தமிழ் தேசிய பேரவைக்கும்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது.

நாளை (2) இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட வாய்ப்புள்ளது.

உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கான பேச்சில் இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த புத்திசாதுரியமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து, தற்போது தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிகளுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இன்று (1) இரவு யாழ்ப்பாணத்திலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் நடந்த நீண்டநேர பேச்சை தொடர்ந்து, கூட்டணி அனேகமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்தது.

நாளை காலையில் இரு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட வாய்ப்புள்ளது. புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னதாக, உள்ளூராட்சிசபைகளை பகிர்வது தொடர்பில் இரு தரப்பும் நாளை காலையில் இன்னொரு சுற்று பேச்சை நடத்தவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்