புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்

Date:

கத்தோலிக்கச் சமூகத்தினரின் புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் ரொபேர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட் (Robert Francis Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போப் லியோ (Leo) என்று அழைக்கப்படும் அவருக்கு வயது 69.

கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பாப்பரசராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Sistine Chapel தேவாலயத்தின் புகைப்போக்கிலிருந்து வெண்புகை தென்பட்ட சுமார் 70 நிமிடங்கள் கழித்து St. Peter’s Basilica தேவாலயத்தின் மாடி முகப்பில் போப் லியோ தோற்றமளித்தார்.

அவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் பேராயர் பதவியில் உள்ள 133 பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.

இத்தாலி மொழியில் உரையாற்றிய புதிய பாப்பரசர், அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்தினார்.

அவர் தமது பணியின் பெரும்பாலான பகுதியைப் பெருவில் கடந்தார்.

2023 ஆம் ஆண்டில்தான் அவர் பேராயர் பதவியை ஏற்றார்.

இதுவரை அவர் ஆகக் குறைவான ஊடக நேர்காணல்களில் கலந்து கொண்டுள்ளார் என்றும் மிக அரிதாகப் பொதுவெளியில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்