அதிவேக நெடுஞ்சாலையில் ஆதரவாளர்களின் பேருந்துகள் நிறுத்தியது தவறுதானாம்: ஒரு வழியாக வாய் திறந்த அனுர!

Date:

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக கொழும்பு காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்துச் சென்ற பேருந்துகள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விமர்சித்தார்.

மேலும் பொறுப்பானவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

நேற்று இரவு ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், பேருந்துகளை அங்கு நிறுத்த அனுமதித்த ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதை ஆதரித்த தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

“இது நடந்திருக்கக் கூடாத ஒன்று” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு பேருந்திற்கும் பொறுப்பாக ஒரு அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட குறிப்பிட்ட பேருந்துகளுக்குப் பொறுப்பான அமைப்பாளர்களின் பட்டியலைக் கேட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஜேவிபி ஆதரவாளர்கள் சென்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டு, மக்கள் வீதியோரங்களில் உட்கார்ந்து உணவு உண்ட காட்சிகள் வெளியாகி பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...

செம்மணி புதைகுழி விவகாரம்: உண்மையை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்