இதுவரை காலம் தமிழன் என்றும், சிங்களவன் என்றும், முஸ்லிம் என்றும் பிரித்து இனவாத அரசியல் செய்தார்கள். இனிமேல் அந்த பிளவு வேண்டாம். நாம் ஒரு தாய் மக்களாக வாழ்வோம் என மஹிந்த ராஜபக்ச பாணியில் பேசியுள்ளார் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் கவனம் செலுத்தாமல்- இனப்பிரச்சினையென்று ஒன்று இருப்பதையே கண்டுகொள்ளாமல்- அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக இருப்போம் என பேசி வந்தார்.
இதே பாணியிலேயே தற்போது ஜேவிபியும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.



