உலக அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று உச்சத்தை எட்டியுள்ளது.
இலங்கையில் தினசரி தங்கத்தின் விலைகள் குறித்த நம்பகமான தகவல்களை வெளியிடும் GOLDCeylon Gold News Network இன் படி, உள்ளூர் சந்தையில் 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலைகள் இன்று காலை நிலவரப்படி வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளன.
உள்ளூர் சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை நேற்றைய விலையான ரூ.238,300 இலிருந்து ரூ.242,000 ஐ எட்டியுள்ளது.
24 கரட் தங்கத்தின் விலை நேற்றைய விலையான ரூ.259,000 இலிருந்து ரூ.262,000 ஐ எட்டியுள்ளது.
விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவி இயக்குநர் இந்திக பண்டார,, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த வரிகளால் உலக சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.
உலகளாவிய தங்கத்தின் விலை உயர்வைப் பாதிக்கும் காரணிகளில் அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக மாற்றுவது மற்றும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் போர் ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.



