முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் – ஜோன் ஜிப்ரிகோ

Date:

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோ தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், வடக்குமாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிக குறைவாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார். தற்போது, வலய கல்வி அலுவலகம் மூலம் அவர்களுக்கு மாதம் 6,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுகிறது, இது 2013ம் ஆண்டுக்குப் பிறகு வடக்குமாகாண சபையின் கல்வி அமைச்சரான குருகுலராஜாவின் ஒப்புதலுடன் நிலைபெற்றது.

இன்னும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 30,000 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட நிரந்தர சம்பளம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது வடக்கு மாகாண சபையின் கீழ் சாத்தியமாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக உள்ள வடக்குமாகாண ஆளுநர் இந்த பிரச்சினைக்கு தீர்வான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜோன் ஜிப்ரிகோ வலியுறுத்தினார். மேலும், பிரதமரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வதன் மூலம், அனைத்து முன்பள்ளிகளும் வடக்குமாகாண சபையின் கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் விதமாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதன் மூலம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துடன் கூடிய நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கி, அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்