மருந்து விநியோகத்தில் ஏற்பட்ட பலவீனங்கள் காரணமாக சுகாதார அமைச்சின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர், அந்தத் தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் நிறுவப்பட்ட முதலாவதும் பழமையானதுமான அரச மருந்தகமான கொழும்பு 07 அரச மருந்தகத்தின் 51வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “உங்கள் நகரத்திற்கான மருந்தகம்” திட்டத்தின் கீழ், அரசு மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரசு மருந்தகங்களை உடனடியாக நிறுவுவது குறித்த கவனத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.