கொட்டாஞ்சேனை கொலை: ஒருவர் தடுத்து வைப்பு!

Date:

கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் இன்று (24) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கொட்டஹேன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு 15, மெத்சந்த செவன வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த பசிந்து விராஜ், கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பொலிசார் இதனை தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் இந்த சந்தேக நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்