மண்மேடு இடிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் பலி

Date:

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

அணை கட்டும் பணிக்காக குழி வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலே இருந்த மண் குவியல் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்ததில் குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (23) அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மண்ணுக்குள் சிக்கிய இளைஞனை மீட்டு பண்டாரவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்தவர் பண்டாரவளை, துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இந்த சம்பவம் குறித்து பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தின் சேதப் புகைப்படங்கள்

மஹர சிறை கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவின் அளவை, சிறை வளாகத்தின்...

மஹர சிறையை சூழ விதிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்

மஹாரா சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம அலுவலர் (ஜிஎன்) பிரிவுகளில்...

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்