தமிழ் ஒலிபரப்பில் முன்னோடியாக விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று முன் தினம் (21.02.2025) காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த அவர், பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றி, ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க சேவையாற்றினார்.
மேலும், 2006ஆம் ஆண்டிற்கான சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவராக தேர்வாகி, தமிழ் ஊடக உலகில் தனது ஒப்பற்ற பணியாற்றல் மூலம் முக்கிய இடத்தை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




