மூன்று நாட்களாக துடித்துக் கொண்டிருந்த குட்டி காட்டு யானை பலி

Date:

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகாயா இரவுநேர விரைவு ரயில், கல்ஓயா பகுதியில் 141வது ரயில் மைல்கல் அருகே மோதியதில் ஆறு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், இந்த விபத்தில் சிக்கிய குட்டி காட்டு யானை ஒன்று மூன்று நாட்களாக துடித்துக் கொண்டிருந்த நிலையில், கால்நடை மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கும் பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் காட்டு யானைகள் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்க, ரயில் பாதைகளில் கண்காணிப்பு கருவிகளை நிறுவுதல், காட்டு யானைகள் பெரும் எண்ணிக்கையில் சுற்றிவரும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்